உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று உற்சாகம்..! - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 April 2026

உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று உற்சாகம்..!

 


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆண்டு திருவிழா கடந்த 26ஆம் தேதி சாகை வார்த்தல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருவிழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே பெண்கள் கூழ் குடங்களுடன் வந்து அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருத்தேரோட்டத்தில், கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரண்ட பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.


மேலும், பக்தர்கள் பலர் அலகு குத்தி, சிறுதேர் இழுத்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து பங்கேற்றது திருவிழாவிற்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


இந்த தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் அம்மனை தரிசித்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். கிராமம் முழுவதும் பக்தி உணர்வும் திருவிழா உற்சாகமும் பரவலாகக் காணப்பட்டது.



D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad